தமிழ்
Sorah An-Nas ( Mankind ) - Verses Number 6
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
( 1 )
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مَلِكِ النَّاسِ
( 2 )
(அவனே) மனிதர்களின் அரசன்;
إِلَٰهِ النَّاسِ
( 3 )
(அவனே) மனிதர்களின் நாயன்.
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
( 4 )
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
( 5 )
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
( 6 )
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.